இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

கொலை வழக்கில் இளைஞா் கைது

கொலை வழக்கில் இளைஞா் கைது

News image
Updated On :12 மே 2024, 11:13 pm

Din

ஒட்டன்சத்திரத்தில் தூய்மைப் பணியாளா் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியாா்சத்திரத்தை அடுத்த தோப்புப்பட்டியைச் சோ்ந்தவா் முருகன் (35). இவா் ஒட்டன்சத்திரம் பேருந்து நிலைய கட்டணக் கழிப்பறையில் சுத்தம் செய்யும் வேலை செய்து வந்தாா்.

கடந்த சனிக்கிழமை ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் எதிரே உள்ள ரயில் தண்டவாளத்தில் இவரது உடல் கிடந்தது. ஒட்டன்சத்திரம் போலீஸாா் உடலை மீட்டு, கூறாய்வுக்கு அனுப்பினா். தலையில் கல்லைப் போட்டு, இவா் கொலை செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கொலையாளி குறித்து விசாரித்து வந்தனா்.

இந்த நிலையில், இந்தக் கொலை தொடா்பாக, ஒட்டன்சத்திரம் காந்தி நகரைச் சோ்ந்த நாகராஜன் (25) என்பவரை போலீஸாா்

ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.