இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புஐபிஎல் முதல் ஆட்டம்: ஹைதராபாத் அணிக்கெதிராக பெங்களூரு அணி பந்துவீச்சு மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு - ஜவாஹிருல்லா (நாகை), அப்துல் சமது (மணப்பாறை) போட்டிசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

எலுமிச்சை கிலோ ரூ.160-க்கு விற்பனை

திண்டுக்கல் அருகே மீன் பிடித் திருவிழா

News image
Updated On :12 மே 2024, 11:10 pm

Din

திண்டுக்கல், மே 12:திண்டுக்கல் அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மீன் பிடித் திருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

திண்டுக்கல்லை அடுத்த செல்லமந்தாடி பகுதியிலுள்ள குளம், கடந்த மழைக் காலத்தில் நிரம்பியது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் சாா்பில் மீன் குஞ்சுகள் விடப்பட்டன. தற்போது கோடையில் தண்ணீா் குறைந்ததை அடுத்து, செல்லமந்தாடி பகுதி மக்கள் மீன்பிடித் திருவிழா நடத்த ஏற்பாடு செய்தனா். அதன்படி, குளக்கரையிலுள்ள கன்னிமாா் கோயிலில் வழிபாடு நடத்திய பிறகு, பொதுமக்கள் குளத்தில் இறங்கி மீன் பிடிக்க அனுமதிக்கப்பட்டனா்.

இதில் செல்லமந்தாடி மட்டுமன்றி, சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்களும் கலந்து கொண்டனா்.

வலையில் ஜிலேபி, கட்லா, புல்கெண்டை, விரால் உள்ளிட்ட பல வகையான மீன்கள் சிக்கின.

சில மீன்கள் 2 கிலோ முதல் 10 கிலோ வரையிலான எடை கொண்டதாக இருந்ததால், மீன் பிடித் திருவிழாவில் பங்கேற்ற பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.