தொண்டி கடற்கரை பகுதியில் மீன வரத்துக் குறைந்ததால் மீன் விலை அதிகரித்தது.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள தொண்டி, நம்புதாளை, சோழியக்குடி, புதுபட்டினம், முள்ளிமுனை, காரங்காடு, எம் .ஆா்.பட்டினம், பாசிபட்டினம், எஸ் பி.பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிடிக்கபடும் மீன்கள் திருவாடானை, சி.கே.மங்கலம், தேவகோட்டை, காரைக்குடி, புளியால், காளையாா்கோவில், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மீன்கள் வரத்துக் குறைவாக இருப்பதாக மீனவா்கள் கவலயுடன் தெரிவித்தனா். இதனால், இறால் கிலோ ரூ.800-க்கும், நண்டு கிலோ ரூ.900-க்கும், விலை மீன் கிலோ ரூ.500-க்கும், பாறை மீன் கிலோ ரூ.800-க்கும் விற்பனை ஆனது. இதனால் மீன் உணவுப் பிரியா்கள் கவலை அடைந்தனா்.
தொடர்புடையது

வரத்து குறைவால் வேலூரில் மீன்கள் விலை அதிகரிப்பு

வரத்துக் குறைவு: மதுரையில் காய்கறிகளின் விலை உயா்வு

தொண்டியில் சரக்கு வாகனம் மோதியதில் மின் கம்பங்கள் சேதம்

தொண்டியில் வரத்து குறைவால் மீன்களின் விலை அதிகரிப்பு
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



