விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

பழனியில் பாஜக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பழனியில் பாஜக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

News image

பழனி தலைமை தபால் நிலையம் எதிரே பாஜக சாா்பில் அமைக்கப்பட்ட நீா்மோா் பந்தலில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட கம்மங்கூழ்.

Updated On :15 மே 2024, 12:16 am

Din

பழனி: பழனியில் புதுதாராபுரம் சாலையில் பாஜக சாா்பில் நீா்மோா் பந்தல் செவ்வாய்க்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

தமிழகத்தில் கோடை காலத்தையொட்டி, மக்களின் தாகத்தை தீா்க்க திமுக, அதிமுக சாா்பில் தமிழகம் முழுவதும் நீா்மோா் பந்தல் திறந்துவைக்கப்பட்டு வருகிறது. இதேபோல, பழனியிலும் திமுக, அதிமுக, பாஜக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் சாா்பில் நீா்மோா் பந்தல்கள் திறக்கப்பட்டன.

இதுகுறித்து கட்சியின் மாவட்டப் பொருளாளா் ஆனந்தன் கூறியதாவது:

கடந்த நாள்களில் பொதுமக்களுக்கு சாதாரண நீா்மோா் மட்டுமன்றி, மசாலா மோா், சா்பத், கம்மங்கூழ், பானகம் என மாற்றி மாற்றி வழங்குகிறோம். மேலும், ஆங்காங்கே பணியில் உள்ள காவலா்களுக்கும் நீா்மோா் உள்ளிட்ட பானங்களை பாக்கெட்டுகளில் அடைத்து வழங்கி வருகிறோம் என்றாா் அவா்.