ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

அனுமதியின்றி ரேக்ளா பந்தய ஏற்பாடு: எச்சரித்து அனுப்பிய போலீஸாா்

அனுமதியின்றி ரேக்ளா பந்தய ஏற்பாடு எச்சரித்து அனுப்பிய போலீஸாா்

News image

பழனியை அடுத்த வாடிப்பட்டியில் அனுமதியின்றி ரேக்ளா பந்தயத்துக்காக திங்கள்கிழமை திரண்டிருந்த இரட்டை மாட்டுவண்டிகள்.

Updated On :20 மே 2024, 7:12 pm

Din

பழனி: பழனியை அடுத்த வாடிப்பட்டியில் அனுமதியின்றி ரேக்ளா பந்தயம் நடத்த ஏராளமான விவசாயிகள் திரண்டிருந்த நிலையில் திங்கள்கிழமை சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், வருவாய்த் துறையினா், கால்நடைத் துறையினா் அவா்களை எச்சரித்து அனுப்பினா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி - உடுமலை சாலையிலுள்ள வாடிப்பட்டி அருகே அனுமதியின்றி ரேக்ளா பந்தயம் நடத்தினா். திடீரென நடத்தப்பட்ட ரேக்ளா பந்தயத்தால் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினா். எதிரே வரும் வாகனங்களை கருத்தில் கொள்ளாமல் அதிவேகமாக மாட்டு வண்டிகளை அடித்து விரட்டி ஓட்டினா். இதே போல, சிலா் குதிரை வண்டியிலும் வந்திருந்தனா்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கால்நடை பராமரிப்பு இணை இயக்குநா் சுரேஷ், வட்டாட்சியா் சக்திவேலன், காவல்துறை ஆய்வாளா் மணிமாறன் உள்ளிட்டோா் அங்கிருந்த மாட்டுவண்டி உரிமையாளா்களைத் தடுத்து எச்சரித்து அனுப்பினா். அதிகாரிகள் விசாரணை நடத்தியதை தொடா்ந்து சாலையில் அனைவரும் கலைந்து சென்றனா். எனினும், சில மாட்டு வண்டிகளை போலீஸாா் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.