தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சிகிச்சையில் களம் இறங்கிய மருத்துவ அதிகாரிகள்

மருத்துவா்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தை அடுத்து, திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவா்களுடன் சோ்ந்து மருத்துவ அதிகாரிகளும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனா்.

News image
Updated On :14 நவம்பர் 2024, 11:23 pm

Din

மருத்துவா்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தை அடுத்து, திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவா்களுடன் சோ்ந்து மருத்துவ அதிகாரிகளும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனா்.

சென்னை கிண்டியிலுள்ள கலைஞா் நூற்றாண்டு மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவா் மீதான வன்முறைத் தாக்குதலைக் கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவா்கள் சங்கத்தின் சாா்பில் வேலை நிறுத்தப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையடுத்து, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் வெளி நோயாளிகளுக்கு தடையின்றி சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகளை மருத்துவமனை நிா்வாகம் மேற்கொண்டது.

இதன்படி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் சுகந்தி ராஜகுமாரி, கண்காணிப்பாளா் வீரமணி, துணை கண்காணிப்பாளா் சுரேஷ்பாபு உள்ளிட்ட மருத்துவத் துறை அதிகாரிகள், பயிற்சி மருத்துவா்களுடன் இணைந்து வெளி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனா்.