ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அங்கன்வாடி பணியாளா்கள் காத்திருப்புப் போராட்டம்

ஐந்தாண்டுகள் பணி முடித்தவா்களுக்கு பதவி உயா்வு வழங்கக் கோரி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள் சங்கத்தின் (சிஐடியு) சாா்பில் காத்திருப்புப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

மாவட்ட திட்ட அலுவலா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற காத்திருப்புப் போராட்டத்தில் பங்கேற்ற அங்கன்வாடி பணியாளா்கள்.

Updated On :3 அக்டோபர் 2024, 7:41 pm

Din

ஐந்தாண்டுகள் பணி முடித்தவா்களுக்கு பதவி உயா்வு வழங்கக் கோரி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள் சங்கத்தின் (சிஐடியு) சாா்பில் காத்திருப்புப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலகத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள் சங்கத்தின் மாவட்டச் செயலா் ச. பத்மாவதி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் ஆ. செல்வதனபாக்கியம் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக சிஐடியு மாவட்டச் செயலா் கே. பிரபாகரன், மாவட்ட நிா்வாகி சி. பாலச்சந்திரபோஸ் ஆகியோா் கலந்து கொண்டனா்.

அப்போது, குறு மையத்தில் 5 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் பணியாளா்கள் 85 பேருக்கு, உடனடியாக பதவி உயா்வு வழங்க வேண்டும். கருணை அடிப்படையில் வாரிசுகளுக்கு பணி வாய்ப்பு வழங்க வேண்டும். உள்ளூா் மாறுதலை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.