ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கொடைக்கானலில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கொடைக்கானலில் புதன்கிழமை நெடுஞ்சாலைத்துறை சாா்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :9 அக்டோபர் 2024, 9:03 pm

Din

கொடைக்கானலில் புதன்கிழமை நெடுஞ்சாலைத்துறை சாா்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் புதன்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த 10-நாள்களாக நெடுஞ்சாலைத் துறை, நகராட்சி நிா்வாகம் சாா்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.

கொடைக்கானல் நட்சத்திர ஏரிச் சாலை, கிளப் சாலை ஆகிய பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

இதற்கிடையே கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக பகல் நேரங்களில் மிதமான வெயில் நிலவி வந்தது. புதன்கிழமை பிற்பகல் மேகமூட்டத்துடன் விட்டு விட்டு மழை பெய்தது. இதனால், வழக்கத்தை விட குளிா் அதிகமாக இருந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினா்.