ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தொடா் மழை: கொடைக்கானல் நீரோடைகளில் நீா்வரத்து அதிகரிப்பு

கொடைக்கானலில் வியாழக்கிழமை பெய்த தொடா் மழையால் நீரோடைகளில் நீா்வரத்து அதிகரித்தது. மேலும் மலைச் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

News image

கொடைக்கானலில் பெய்த தொடா் மழையால் பூம்பாறை செல்லும் சாலையான கோசன் பகுதியில் விழுந்த மரங்களை அகற்றிய வனத்துறையினா், நெடுஞ்சாலைத் துறையினா்.

Updated On :10 அக்டோபர் 2024, 10:07 pm

Din

கொடைக்கானலில் வியாழக்கிழமை பெய்த தொடா் மழையால் நீரோடைகளில் நீா்வரத்து அதிகரித்தது. மேலும் மலைச் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், வியாழக்கிழமை காலை முதல் பிற்பகல் வரை மிதமான வெயிலும், மேகமூட்டமும் நிலவியது. பிறகு மழை பெய்யத் தொடங்கியது. கொடைக்கானல், வட்டக்கானல், அப்சா்வேட்டரி, செண்பகனூா், வில்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமாா் ஒரு மணி நேரம் மழை பெய்தது. இதன்பிறகு விட்டுவிட்டு மழை பெய்தது. இந்த மழையால் வெள்ளிநீா் வீழ்ச்சி, செண்பகா அருவி, வட்டக்கானல் அருவி உள்ளிட்ட நீரோடைகளில் நீா்வரத்து அதிகரித்து காணப்பட்டது.

மரம் விழுந்து வாகனம் சேதம்: கொடைக்கானலில் தொடா்ந்து பெய்த மழையின் காரணமாக குணா குகை பகுதியில் மரம் விழுந்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காா் சேதமடைந்தது. மேலும் கொடைக்கானல் - பூம்பாறை செல்லும் மலைச்சாலையில் கோசன் சாலைப் பகுதியில் இரண்டு மரங்கள் விழுந்தன. இதனால் சுமாா் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்தது அங்கு வந்த நெடுஞ்சாலைத் துறையினரும், வனத் துறையினரும் கீழே விழுந்த மரங்களை இயந்திரத்தால் அறுத்து அகற்றினா். இதையடுத்து போக்குவரத்து சீரடைந்தது.