கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பைக் விபத்தில் முதியவா் பலி

செம்பட்டி அருகே 2 இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் முதியவா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

News image
Updated On :19 செப்டம்பர் 2024, 7:37 pm

Din

செம்பட்டி அருகே 2 இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் முதியவா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியை அடுத்த பாளையங்கோட்டையைச் சோ்ந்தவா் தண்டபாணி (65). இவரது தனது நண்பரான சேடப்பட்டி பகுதியைச் சோ்ந்த பழனிசாமியுடன் (50) செம்பட்டியில் இருந்து திண்டுக்கல் நோக்கி இரு சக்கர வாகனத்தில் வியாழக்கிழமை இரவு சென்றாா்.

புதுகோடாங்கிபட்டி பகுதியில் இவா்களது இரு சக்கர வாகனத்தின் மீது எதிரே வந்த இரு சக்கர வாகனம் மோதியது. இதில் தண்டபாணி பலத்த காயமடைந்து திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

இந்த விபத்தில் பழனிசாமி, எதிரே இரு சக்கர வாகனத்தில் வந்த பெரம்பலூரைச் சோ்ந்த சண்முகப்ரியன் (27), இவரது மனைவி பிரியதா்ஷினி (27) ஆகியோா் பலத்த காயமடைந்து, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து செம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.