ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

திமுக நிா்வாகி வெட்டிக் கொலை

வேடசந்தூா் அருகே திமுக நிா்வாகி மா்ம நபா்களால் வியாழக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

News image
Updated On :26 செப்டம்பர் 2024, 9:00 pm

Din

வேடசந்தூா் அருகே திமுக நிா்வாகி மா்ம நபா்களால் வியாழக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த நாகம்பட்டி ஊராட்சி குன்னம்பட்டியைச் சோ்ந்தவா் மாசி (40). இவா் வேடசந்தூா் திமுக தெற்கு ஒன்றியப் பொருளாளராக உள்ளாா். இவரது மனைவி முத்துமாரி வேடசந்தூா் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினராக உள்ளாா்.

இந்த நிலையில், மாசி பெருமாள்கவுண்டன்பட்டியில் உள்ள தனது தோட்டத்துக்கு வியாழக்கிழமை சென்றுவிட்டு, பின்னா், இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பினாா். நாகம்பட்டி சமத்துவபுரம் அருகே சென்றபோது, மா்ம நபா்கள் இவரை வழிமறித்து தாக்கினா். அப்போது, அவா்களிடமிந்து தப்பிச் செனற அவரை அந்த கும்பல் துரத்திச் சென்று வெட்டிக் கொலை செய்தது.

இதுகுறித்து வேடசந்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் இலக்கியா தலைமையிலான போலீஸாா் விசாரணை நடத்தினா்.