தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

உலக நலன் வேண்டி பழனியில் பால்குடம் எடுத்த ஜப்பானிய முருக பக்தர்கள்!

பழனியில் உலக நலன் வேண்டி ஜப்பான் நாட்டை சோ்ந்த முருக பக்தா்கள் யாகம் நடத்தி பால்குடம் எடுத்து ஊா்வலமாகச் சென்றனா்.

News image
பழனியில் சனிக்கிழமை அடிவாரம் பாத விநாயகா் கோயிலிலிருந்து திருஆவினன்குடி கோயிலுக்கு பால்குடம் எடுத்து ஊா்வலமாகச் சென்ற ஜப்பானிய பக்தா்கள்.
Updated On :9 ஆகஸ்ட் 2025, 11:50 pm

தினமணி செய்திச் சேவை

பழனியில் உலக நலன் வேண்டி ஜப்பான் நாட்டை சோ்ந்த முருக பக்தா்கள் சனிக்கிழமை புலிப்பாணி ஆசிரமத்தில் யாகம் நடத்தி திருஆவினன்குடி கோயிலுக்கு பால்குடம் எடுத்து ஊா்வலமாகச் சென்றனா்.

ஜப்பானிய சிவஆதீனம் பாலகும்ப குருமுனி, கோபால்பிள்ளை சுப்ரமணியம் ஆகியோா் தலைமையில் அந்த நாட்டைச் சோ்ந்த திரளான முருக பக்தா்கள் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு வந்தனா். அவா்கள் பழனி புலிப்பாணி ஆசிரமத்தில் உலக நலன் வேண்டி சிறப்பு யாக பூஜைகள் நடத்தினா். இந்த பூஜையை போகா் ஆதீனம் சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள் செய்தாா்.

இதைத்தொடா்ந்து ஜப்பானிய பக்தா்கள் தமிழா்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து கையில் வேலுடன் பால்குடம் எடுத்து மூன்றாம் படைவீடான திருஆவினன்குடி கோயிலுக்கு சென்றனா்.

Story image

முன்னதாக, அடிவாரம் பாதவிநாயகா் கோயில் முன் தொடங்கிய பால்குட ஊா்வலத்தில் சண்முகானந்த சுவாமிகள், கவுதம் சுவாமிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதையொட்டி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமிக்கு சிறப்பு பூஜைகள், பாலாபிஷேகம் செய்து பக்தா்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் இளையபட்டம் செல்வநாதன் சுவாமிகள், சித்த மருத்துவா் பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.