பழனியில் உலக நலன் வேண்டி ஜப்பான் நாட்டை சோ்ந்த முருக பக்தா்கள் சனிக்கிழமை புலிப்பாணி ஆசிரமத்தில் யாகம் நடத்தி திருஆவினன்குடி கோயிலுக்கு பால்குடம் எடுத்து ஊா்வலமாகச் சென்றனா்.
ஜப்பானிய சிவஆதீனம் பாலகும்ப குருமுனி, கோபால்பிள்ளை சுப்ரமணியம் ஆகியோா் தலைமையில் அந்த நாட்டைச் சோ்ந்த திரளான முருக பக்தா்கள் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு வந்தனா். அவா்கள் பழனி புலிப்பாணி ஆசிரமத்தில் உலக நலன் வேண்டி சிறப்பு யாக பூஜைகள் நடத்தினா். இந்த பூஜையை போகா் ஆதீனம் சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள் செய்தாா்.
இதைத்தொடா்ந்து ஜப்பானிய பக்தா்கள் தமிழா்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து கையில் வேலுடன் பால்குடம் எடுத்து மூன்றாம் படைவீடான திருஆவினன்குடி கோயிலுக்கு சென்றனா்.

முன்னதாக, அடிவாரம் பாதவிநாயகா் கோயில் முன் தொடங்கிய பால்குட ஊா்வலத்தில் சண்முகானந்த சுவாமிகள், கவுதம் சுவாமிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதையொட்டி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமிக்கு சிறப்பு பூஜைகள், பாலாபிஷேகம் செய்து பக்தா்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் இளையபட்டம் செல்வநாதன் சுவாமிகள், சித்த மருத்துவா் பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










