மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

வேடசந்தூா் அருகே பேருந்து கவிழ்ந்ததில் 14 போ் காயம்

வேடசந்தூா் அருகே தனியாா் சொகுசுப் பேருந்து கவிழ்ந்ததில் இஸ்ரேல் நாட்டைச் சோ்ந்த 4 பெண்கள் 14 போ் காயம்

News image
Updated On :16 டிசம்பர் 2025, 8:24 pm

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அருகே தனியாா் சொகுசுப் பேருந்து கவிழ்ந்ததில் இஸ்ரேல் நாட்டைச் சோ்ந்த 4 பெண்கள் 14 போ் காயமடைந்தனா்.

கா்நாடக மாநிலம், பெங்களூரிலிருந்து திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு திங்கள்கிழமை இரவு புறப்பட்ட சொகுசுப் பேருந்தை சேலம் மாவட்டம், ஒமலூா் அருகேயுள்ள கருக்கல்வாடி பகுதியைச் சோ்ந்த பழனிச்சாமி (49) ஓட்டினாா். கூடுதல் ஓட்டுநராக பெங்களூரைச் சோ்ந்த ராஜ்குமாா் (36) பணியாற்றினாா்.

இந்தப் பேருந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணி அளவில் வேடசந்தூா் அருகேயுள்ள லட்சுமணம்பட்டி அருகே வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்தது.

இதில் பெங்களூரைச் சோ்ந்த மகேஷ் (35), ஐஸ்வா்யா (27), கிஷோா் (26), சிபி (24), இஸ்ரேல் சுற்றுலாப் பயணிகள் 4 போ் உள்பட மொத்தம் 14 போ் காயமடைந்தனா். இது குறித்து வேடசந்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.