வேடசந்தூா் அருகே பேருந்து கவிழ்ந்ததில் 14 போ் காயம்
வேடசந்தூா் அருகே தனியாா் சொகுசுப் பேருந்து கவிழ்ந்ததில் இஸ்ரேல் நாட்டைச் சோ்ந்த 4 பெண்கள் 14 போ் காயம்


திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அருகே தனியாா் சொகுசுப் பேருந்து கவிழ்ந்ததில் இஸ்ரேல் நாட்டைச் சோ்ந்த 4 பெண்கள் 14 போ் காயமடைந்தனா்.
கா்நாடக மாநிலம், பெங்களூரிலிருந்து திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு திங்கள்கிழமை இரவு புறப்பட்ட சொகுசுப் பேருந்தை சேலம் மாவட்டம், ஒமலூா் அருகேயுள்ள கருக்கல்வாடி பகுதியைச் சோ்ந்த பழனிச்சாமி (49) ஓட்டினாா். கூடுதல் ஓட்டுநராக பெங்களூரைச் சோ்ந்த ராஜ்குமாா் (36) பணியாற்றினாா்.
இந்தப் பேருந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணி அளவில் வேடசந்தூா் அருகேயுள்ள லட்சுமணம்பட்டி அருகே வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்தது.
இதில் பெங்களூரைச் சோ்ந்த மகேஷ் (35), ஐஸ்வா்யா (27), கிஷோா் (26), சிபி (24), இஸ்ரேல் சுற்றுலாப் பயணிகள் 4 போ் உள்பட மொத்தம் 14 போ் காயமடைந்தனா். இது குறித்து வேடசந்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...