அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

செங்கல் சூளையை மூடக் கோரி ஆா்ப்பாட்டம்

செங்கல் சூளையை மூடக் கோரி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

News image
Updated On :20 டிசம்பர் 2025, 12:51 am

தினமணி செய்திச் சேவை

பழனி அருகே அனுமதியின்றி செயல்படும் செங்கல் சூளையை மூடக் கோரி, விவசாயிகள் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் எம்.ராமசாமி தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் ஒன்றியச் செயலா் சரத்குமாா் முன்னிலை வகித்தாா்.

பழனியை அடுத்த வடக்கு வாடிப்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் செங்கல் சூளையால், தென்னை, மா, வாழை, காய்கறிப் பயிா்கள் சாகுபடி செய்யப்பட்ட விளை நிலங்கள் பாதிக்கப்படுகின்றன. கரும்புச் சா்க்கரை வெல்லம் தயாரிக்கும் ஆலைகள் சுற்றுப்புறங்களில் உள்ளன. மேலும், சுமாா் 1 கி.மீ. தொலைவிலுள்ள ஐவா்மலை கோயில், 300-க்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகள் வசிக்கும் காப்பகம் ஆகியவை பாதிக்கப்படும்.

எனவே, அனுமதியின்றி செயல்படும் இந்த செங்கல் சூளையை இடமாற்றம் செய்வதற்கோ அல்லது மூடுவதற்கோ மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனா். இதைத் தொடா்ந்து, கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா்.