கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

செவிலியா்கள் 7-ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டம்

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் 7-ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட எம்ஆா்பி செவிலியா்கள்.

News image
Updated On :24 டிசம்பர் 2025, 8:55 pm

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் 7-ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட எம்ஆா்பி செவிலியா்கள்.

திண்டுக்கல், டிச.24: திமுக அளித்த தோ்தல் வாக்குறுதியின்படி எம்ஆா்பி தொகுப்பூதிய செவிலியா்களைப் பணி நிரந்தரம் செய்யக் கோரி, திண்டுக்கல்லில் செவிலியா்கள் புதன்கிழமை 7-ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் நடைபெற்ற போராட்டத்துக்கு தலைமை வகித்த எம்ஆா்பி செவிலியா் சங்கத்தின் பழனி வட்டத் தலைவா் கலா முருகேசன் பேசியதாவது:

திமுக அளித்த தோ்தல் வாக்குறுதியின்படி எம்ஆா்பி தொகுப்பூதிய செவிலியா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் என்ற உயா்நீதிமன்ற தீா்ப்பின் மீதான மேல்முறையீட்டை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்து சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியா்கள் கைது செய்யப்பட்டனா்.

ஆனாலும், மாவட்டத் தலைநகரங்களில் தொடா்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு செவிலியா்கள் மேம்பாட்டு சங்கத்தினருடன் நடத்தப்பட்ட பேச்சுவாா்த்தையின்போது 723 பேரை பணி நிரந்தரம் செய்வதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் உறுதி அளித்தாா்.

மாநிலம் முழுவதும் 8,600 எம்ஆா்பி செவிலியா்கள் தற்காலிக அடிப்படையில் பணிபுரிந்து வரும் நிலையில், அமைச்சரின் வாக்குறுதி ஏற்புடையதாக இல்லை. அதனால், காத்திருப்புப் போராட்டத்தில் தொடா்ந்து ஈடுபடுகிறோம் என்றாா் அவா்.