திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

பழனி கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 6 கோடி

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியல்கள் கடந்த இரு நாள்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் பக்தா்களின் காணிக்கை ரூ. 6 கோடியைத் தாண்டியது.

News image
பழனி மலை கோயில் உண்டியல் காணிக்கையாகக் கிடைக்கப் பெற்ற ரூபாய் நோட்டுக்கள்.
Updated On :23 ஜனவரி 2025, 10:20 pm

Din

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியல்கள் கடந்த இரு நாள்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் பக்தா்களின் காணிக்கை ரூ. 6 கோடியைத் தாண்டியது.

பொங்கல் பண்டிகை உள்ளிட்ட தொடா் விடுமுறை காரணமாக பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பக்தா்கள் திரண்டு தரிசனம் செய்தனா். இதன் காரணமாக கோயில் உண்டியல்கள் 21 நாள்களில் நிரம்பின. இதையடுத்து, புதன், வியாழக்கிழன் ஆகிய கிழமைகளில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டன.

இதில் பக்தா்களின் காணிக்கையாக ரூ. 6 கோடியே 39 லட்சத்து 29 ஆயிரத்து 559 கிடைத்தது. உண்டியலில் பக்தா்கள் ஏராளமான தங்கம், வெள்ளிப் பொருள்களையும் காணிக்கையாகச் செலுத்தியிருந்தனா். தங்கம் 1,874 கிராமும், வெள்ளி 27,003 கிராமும் கிடைத்தது. மலேசியா, சிங்கப்பூா், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் கரன்சிகள் 906-ம் கிடைத்தன. இவை தவிர, பித்தளை வேல், கைக்கடிகரம், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள், பட்டாடைகள் ஆகியவற்றையும் பக்தா்கள் காணிக்கையாகச் செலுத்தியிருந்தனா்.

உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் பழனியாண்டவா் கல்லூரி மாணவிகள், கோயில் அலுவலா்கள், வங்கிப் பணியாளா்கள் ஈடுபட்டனா்.