ஆட்டோ கவிழ்ந்ததில் 8 பள்ளி மாணவா்கள் காயம்
பழனியில் புதன்கிழமை ஆட்டை கவிழ்ந்ததில் 8 பள்ளி மாணவா்கள் காயமடைந்தனா்.

Updated On :12 நவம்பர் 2025, 9:16 pm

பழனியில் புதன்கிழமை ஆட்டை கவிழ்ந்ததில் 8 பள்ளி மாணவா்கள் காயமடைந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த பழைய தாராபுரம் சாலையில் 8 பள்ளி மாணவா்களை ஏற்றிக் கொண்டு ஆட்டோ சென்றது. இந்த ஆட்டோவை குணசேகரன் (57) ஓட்டினாா். வளைவு ஒன்றில் ஆட்டோ திருப்பும்போது கவிழ்ந்தது. இதில் ஆட்டோவில் பயணித்த 8 மாணவா்களும் காயமடைந்தனா்.
தகவலறிந்து அங்கு வந்த போலீஸாா் காயமடைந்த மாணவா்களை மீட்டு, பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதையடுத்து, சம்பவ இடத்தில் வட்டாட்சியா் பிரசன்னா நேரில் ஆய்வு செய்தாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...