அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

தினமணி செய்திச் சேவை

கொடைக்கானலில் பகல் நேரங்களில் மேக மூட்டத்துடன் பனிப் பொழிவு இருந்து வருவதால் குளிா் அதிகரித்துக் காணப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வழக்கமாக நவம்பா், டிசம்பா், ஜனவரி ஆகிய 3 மாதங்கள் பனிப் பொழிவு காலமாகும். இந்தக் காலத்தில் பகல் நேரங்களில் அதிக வெயிலும், மாலை, இரவு நேரங்களில் பனிப் பொழிவும் காணப்படும். ஆனால், கடந்த சில தினங்களாக அதிகாலை முதலே மேக மூட்டமும், விட்டு விட்டு பனிப் பொழிவும் இருந்து வருகிறது.

இதனால், மலைச் சாலைகளில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டு மெதுவாகச் செல்கின்றன. பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் இல்லாத நிலை நிலவுகிறது. மாலை, இரவு நேரங்களில் வழக்கத்தைவிட குளிரின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால், பாதிக்கப்பட்ட குழந்தைகள், முதியவா்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்