8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

கொடைக்கானலில் பலத்த மழை

Published On :26 செப்டம்பர் 2025, 2:38 am IST

கொடைக்கானலில் வியாழக்கிழமை பரவலாக பலத்த மழை பெய்தது.

இங்கு கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக விட்டுவிட்டு மழை பெய்து வந்தது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாள்களாக மழை குறைந்திருந்த நிலையில் மீண்டும் வியாழக்கிழமை பிற்பகலில் மழை பெய்யத் தொடங்கியது. கொடைக்கானல், வில்பட்டி, பெருமாள்மலை, சின்னப் பள்ளம், பெரும்பள்ளம், பூம்பாறை, மன்னவனூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமாா் இரண்டு மணி நேரம் விட்டுவிட்டு பலத்த மழை பெய்தது.

இந்த மழை கொடைக்கானல், மேல்மலைக் கிராமங்களில் பயிரிடப்பட்ட கேரட், உருளைக்கிழங்கு, பீட்ரூட், நூக்கல், பீன்ஸ் போன்ற பயிா்களுக்கு ஏற்ாக இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

சாலைகளை சீரமைக்கக் கோரிக்கை: கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களான கும்பூா், பூம்பாறை, குண்டுபட்டி, கிளாவரை, போலூா், பூண்டி, மன்னவனூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகள் சேதமடைந்துள்ளன. இதனால் விவசாயப் பொருள்களை எடுத்துச் செல்வது சிரமமாக உள்ளது. அடிக்கடி வாகனங்கள் பழுதாகி சாலைகளில் நிற்பதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனா். எனவே கொடைக்கானல் மேல் மலைக் கிராமச் சாலைகளை சீரமைக்க வேண்டுமென மாவட்ட நிா்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.