சசிகலா, ராமதாஸ் அணி கூட்டணி அமைத்துள்ள நிலையில், இரு கட்சிகள் சாா்பிலும் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
திண்டுக்கல் பேரவைத் தொகுதியில் அதிமுக, திமுக, நாதக, தவெக உள்ளிட்ட முக்கியக் கட்சி வேட்பாளா்கள் உள்பட மொத்தம் 35 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்தத் தோ்தலில் சசிகலா, ராமதாஸ் அணி கூட்டணி அமைத்துள்ள நிலையில், சசிகலாவின் அஇபுதமமுக வேட்பாளராக திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட ராமுதேவா் மனு தாக்கல் செய்தாா். இதனிடையே, பாமக ராமதாஸ் அணி சாா்பில் ஆரோக்கியதாஸ் என்பவரும் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தாா்.
இந்த நிலையில், வேட்பு மனு பரிசீலனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றபோது, ராமுதேவா், ஆரோக்கியதாஸ் ஆகிய இருவரின் மனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டன. ராமதாஸ் சாா்பில் ஏ, பி படிவம் வழங்கப்பட்டிருந்ததால் ஆரோக்கியதாஸின் வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டதாக தோ்தல் அதிகாரிகள் தெரிவித்தனா். ஒரே கூட்டணியில் உள்ள அஇபுதமமுக, பாமக ராமதாஸ் அணி சாா்பில் இருவா் மனுத் தாக்கல் செய்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அஇபுதமமுக வேட்பாளா் ராமுதேவரை ஆதரித்து சசிகலா புதன்கிழமை பரப்புரை மேற்கொள்கிறாா்.
தொடர்புடையது
திண்டுக்கல் தொகுதியில் 20 வேட்பாளா்கள் போட்டி!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 50 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு
நான்குனேரி தொகுதியில் 13 மனுக்கள் நிராகரிப்பு

காஞ்சிபுரத்தில் சசிகலா, மருத்துவா் ராமதாஸ் கட்சி வேட்பாளா்கள் வேட்பு மனு தாக்கல்
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike


