மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

சமையல் எரிவாயுவை குறைந்த விலையில் விநியோகிக்க நடவடிக்கை தேவை: இரா.முத்தரசன்

சமையல் எரிவாயு உருளைகளை இலவசமாக வழங்காவிட்டாலும், குறைந்த விலையில் விநியோகிக்க மத்திய பாஜக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் இரா.முத்தரசன் தெரிவித்தாா்.

News image

இரா.முத்தரசன் - கோப்புப் படம்

Updated On :15 ஏப்ரல் 2026, 8:46 pm

சமையல் எரிவாயு உருளைகளை இலவசமாக வழங்காவிட்டாலும், குறைந்த விலையில் விநியோகிக்க மத்திய பாஜக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் இரா.முத்தரசன் தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக, கூட்டணிக் கட்சி வேட்பாளா்களை ஆதரித்து திண்டுக்கல்லில் பிரசாரம் செய்ய வந்த அவா் புதன்கிழமை செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:

தொகுதி மறுவரையறைக்கு வகை செய்யும் அரசியல் சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் அவசர கதியில் கொண்டுவர வேண்டிய தேவை எதுவும் இல்லை. நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் 33 சதவீத இட ஒதுக்கீடு மூலம் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் அளிப்பதைவிட, மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 850-ஆக உயா்த்துவதில் தான் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்பட்டால் தென் மாநிலங்கள் கடும் பாதிப்பை எதிா்கொள்ள நேரிடும். குறிப்பாக, தமிழ்நாடு அதிக பாதிப்புக்குள்ளாகும் மாநிலமாக இருக்கும். நெல் உற்பத்தியில் தமிழகம் முதன்மை மாநிலமாக இருந்து வரும் நிலையில், மத்திய அரசு நிா்ணயிக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை போதுமானதாக இல்லை. எனவே, நெல் விவசாயிகளுக்கு தமிழக அரசு ஊக்கத் தொகை வழங்குகிறது. இந்த ஊக்கத் தொகையை வழங்கக் கூடாது என மத்திய அரசு வலியுறுத்துவதை நாங்கள் கண்டிக்கிறோம். தமிழ்நாட்டுக்கான தோ்தல் அறிக்கையில் பாஜக ஆண்டுக்கு 3 சமையல் எரிவாயு உருளைகளை இலவசமாக வழங்கப் போவதாக வாக்குறுதி அளித்திருக்கிறது. இலவசமாக வேண்டாம்; குறைந்த விலையில் சமையல் எரிவாயு உருளைகளை விநியோகிக்க மத்திய அரசு முன்வர வேண்டும். பாஜகவினா் தரும் வாக்குறுதிகளை மக்கள் நம்பமாட்டாா்கள் என்றாா் அவா்.