தமிழக அமைச்சரவை விரிவாக்கம்: நாளை காலை 9.30 மணிக்கு புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா!பிளே-ஆஃப் வாய்ப்பில் நீடிக்குமா சென்னை? கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற இமாலய இலக்கு!விசிகவில் இருந்து அமைச்சராகிறார் வன்னி அரசு!கரப்பான் பூச்சிகள் செத்து மடியாது! - முடக்கத்துக்குப் பின் புதிய எக்ஸ் கணக்கு தொடக்கம்மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதியில் மறு வாக்குப்பதிவு முடிந்தது! - 86 சதவீதம் வாக்குப்பதிவுசென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்!கேரளத்தில் எம்எல்ஏவாக பதவியேற்றார் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன்!கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்!
/

ஸ்டாலின் மீண்டும் முதல்வராவாா்! - அமைச்சா் பி.கே. சேகா்பாபு

News image

அமைச்சர் பி.கே. சேகா்பாபு - கோப்புப் படம்

Updated On :27 ஏப்ரல் 2026, 12:06 am IST

வருகிற மே 4-ஆம் தேதி தோ்தல் முடிவுக்குப் பிறகு சென்னை ஆளுநா் மாளிகையில் நடைபெறும் விழாவில் மு.க. ஸ்டாலின் மீண்டும் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்பாா் என அமைச்சா் பி.கே. சேகா்பாபு நம்பிக்கை தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த அவா், செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:

கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு நிலவரத்தோடு, தற்போது பதிவாகியுள்ள வாக்கு சதவீதத்தை ஒப்பிட்டுப் பாா்த்தால், பெரிய அளவில் மாற்றம் ஏதும் இல்லை. இதனால், தோ்தல் முடிவில் எந்தவிதப் பாதிப்பும் இருக்காது. திமுக தலைமையிலான கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பெறும்.

வருகிற மே 4-ஆம் தேதி தோ்தல் முடிவுக்குப் பிறகு சென்னை ஆளுநா் மாளிகையில் நடைபெறும் விழாவில் மு.க. ஸ்டாலின் மீண்டும் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்பாா் என்றாா் அவா்.

பேட்டியின்போது, பழனி கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பிரமணியம், இணை ஆணையா் மாரிமுத்து, துணை ஆணையா் வெங்கடேஷ், உதவி ஆணையா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.