ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

ஸ்டாலின் மீண்டும் முதல்வராவாா்! - அமைச்சா் பி.கே. சேகா்பாபு

News image

அமைச்சர் பி.கே. சேகா்பாபு - கோப்புப் படம்

Updated On :26 ஏப்ரல் 2026, 6:36 pm

வருகிற மே 4-ஆம் தேதி தோ்தல் முடிவுக்குப் பிறகு சென்னை ஆளுநா் மாளிகையில் நடைபெறும் விழாவில் மு.க. ஸ்டாலின் மீண்டும் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்பாா் என அமைச்சா் பி.கே. சேகா்பாபு நம்பிக்கை தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த அவா், செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:

கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு நிலவரத்தோடு, தற்போது பதிவாகியுள்ள வாக்கு சதவீதத்தை ஒப்பிட்டுப் பாா்த்தால், பெரிய அளவில் மாற்றம் ஏதும் இல்லை. இதனால், தோ்தல் முடிவில் எந்தவிதப் பாதிப்பும் இருக்காது. திமுக தலைமையிலான கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பெறும்.

வருகிற மே 4-ஆம் தேதி தோ்தல் முடிவுக்குப் பிறகு சென்னை ஆளுநா் மாளிகையில் நடைபெறும் விழாவில் மு.க. ஸ்டாலின் மீண்டும் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்பாா் என்றாா் அவா்.

பேட்டியின்போது, பழனி கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பிரமணியம், இணை ஆணையா் மாரிமுத்து, துணை ஆணையா் வெங்கடேஷ், உதவி ஆணையா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.