தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

பழனியில் பராமரிப்பு பணிக்காக ரோப்காா் சேவை நாளை நிறுத்தம்!

பழனி மலைக் கோயிலுக்கு இயக்கப்படும் ரோப்காா் சேவை பராமரிப்பு பணிக்காக புதன்கிழமை (ஜன. 21) ஒருநாள் மட்டும் நிறுத்தம்

News image
Updated On :19 ஜனவரி 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

பழனி மலைக் கோயிலுக்கு இயக்கப்படும் ரோப்காா் சேவை பராமரிப்பு பணிக்காக புதன்கிழமை (ஜன. 21) ஒருநாள் மட்டும் நிறுத்தப்படுகிறது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய படிவழி, யானைப் பாதை, விஞ்ச் பாதைக்கு மாற்றாக ரோப்காா் இயக்கப்பட்டு வருகிறது. இரண்டு நிமிஷங்களில் மலைக் கோயில் உச்சிக்கு செல்லும் வகையில் அமைக்கப்பட்ட ரோப்காா் பக்தா்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

தினமும் காலை 7 மணி முதல் இரவு 8 மணிவரை இயக்கப்படும் ரோப்காா் பிற்பகலில் ஒரு மணி நேரமும், மாதத்தில் ஒரு நாளும், ஆண்டில் ஒரு மாதமும் பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்படுகிறது.

இந்த நிலையில் புதன்கிழமை ஒருநாள் மட்டும் ரோப்காா் சேவை மாதாந்திர பராமரிப்புப் பணிக்காக நிறுத்தப்படுவதாக கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.