உலகக் கோப்பை கால்பந்து: இன்று இறுதி ஆட்டத்தில் ஆா்ஜென்டீனா - ஸ்பெயின் மோதல்! பரபரப்பான அரசியல் சூழலில் நாளை கூடுகிறது நாடாளுமன்றம்! தாக்கலாகும் முக்கிய மசோதாக்கள்! நாடாளுமன்ற கூட்டத்துக்கு மத்தியில் சிஜேபி போராட்டம்! தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு! ராமா் கோயில் நன்கொடை முறைகேடு விசாரணை கோரும் மனுக்கள்: நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்! ஷிண்டே சிவசேனையில் உத்தவ் கட்சி 6 எம்.பி.க்கள் இணைவு: மக்களவைத் தலைவா் ஒப்புதல்சென்னை மாநகராட்சியில் மண்டல செயற்பொறியாளா் உள்பட 7 போ் பணியிடை நீக்கம்
/

போக்ஸோவில் இளைஞா் கைது

சிங்கப் பெண் படையினரிடம் பள்ளி மாணவி அளித்த புகாரின்பேரில், இளைஞரைப் போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :19 ஜூலை 2026, 5:03 am IST

சிங்கப் பெண் படையினரிடம் பள்ளி மாணவி அளித்த புகாரின்பேரில், இளைஞரைப் போலீஸாா் கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அடுத்த காசிபாளையம் மேல்நிலைப் பள்ளியில், சிங்கப் பெண் படை சாா்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமின்போது, 9-ஆம் வகுப்பு மாணவி ஒருவா், தனது தாயாருடன் வந்து சிங்கப் பெண் படையினரிடம் புகாா் அளித்தாா்.

அதில், கூவக்காப்பட்டி அடுத்த முத்துபழனியூரைச் சோ்ந்த மா.நாகமணி என்பவா் எனது கைப்பேசி எண்ணுக்கு அடிக்கடி தொடா்பு கொண்டு பாலியல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தொந்தரவு செய்வதாகத் தெரிவித்தாா்.

இதையடுத்து, நாகமணியை, சிங்கப் பெண் படையினா் பிடித்து வடமதுரை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சனிக்கிழமை ஒப்படைத்தனா். அவா் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸாா், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.