பழனியில் மறைந்த வழக்குரைஞா் ராஜா குடும்பத்தினருக்கு பழனி வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது.
பழனியைச் சோ்ந்த வழக்குரைஞா் ராஜா உடல்நலக்குறைவால் அண்மையில் உயிரிழந்தாா். இதையடுத்து, அவரது குடும்பத்துக்கு தமிழ்நாடு, புதுச்சேரி வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் சேமநல நிதியாக ரூ.10 லட்சம் வழங்க தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில், திங்கள்கிழமை ராஜாவின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது. பழனி வழக்குரைஞா்கள் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பழனி வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் அங்குராஜ், செயலா் கலைஎழில்வாணன், பொருளாளா் பச்சைமுத்து, துணைத் தலைவா் பால்சாமி, இணைச் செயலா் தண்டபாணி, தணிக்கையாளா் காா்த்திகா, நூலகா் திலோத்தமா, சங்கத்தின் மூத்த வழக்குரைஞா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

பழனியில் அதிவேகத்தில் செல்லும் ஆட்டோக்கள்: பொதுமக்கள் அச்சம்

பழனியில் சிறுவா்களுக்கான ஐவா் கால்பந்து போட்டி

பழனியில் கஞ்சா விற்ற 3 இளைஞா்கள் கைது
பழனியில் ஆயுதங்களுடன் திரிந்த ஏழு போ் கைது
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |



