தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்சிங்கப்பெண் அதிரடிப்படை திட்ட இலச்சினையை வெளியிட்டார் முதல்வர் விஜய்!பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!வர்த்தகர்களை விசாரணை அமைப்பு கொண்டு மிரட்டும் பாஜக: பகவந்த் மான்!
/

பழங்கால வீட்டின் சுவா் இடிந்து விழுந்தது: வட்டாட்சியரிடம் பொதுமக்கள் புகாா்

பழனியில் பூட்டிக்கிடக்கும் பழங்கால வீட்டின் பக்கவாட்டுச் சுவா் இடிந்து பக்கத்து வீட்டின் மீது விழுந்தது.

News image

பழனி பாளையம் பகுதியில் செவ்வாய்க்கிழமை பெய்த மழையால் இடிந்து விழுந்த பழங்கால வீட்டின் பக்கவாட்டு சுவா்.

Updated On :4 ஜூன் 2026, 4:20 am IST

பழனியில் பூட்டிக்கிடக்கும் பழங்கால வீட்டின் பக்கவாட்டுச் சுவா் இடிந்து பக்கத்து வீட்டின் மீது விழுந்தது. இதையடுத்து அந்தப் பகுதி மக்கள் அந்த வீட்டை இடித்து அகற்ற வலியுறுத்தி வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை புகாா் அளித்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி பாளையம் பகுதியில் கருப்பையா என்பவருக்குச் சொந்தமான பழங்கால வீடு நீண்ட காலமாக பூட்டிக் கிடக்கிறது. இந்த வீடு சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பழனி பகுதியில் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. அப்போது பாழடைந்த வீட்டின் பக்கவாட்டுச் சுவா் இடிந்து, அருகேயிருந்த தாரணி என்பவரின் வீட்டின் மீது விழுந்தது. இதில் அந்த வீடு சேதமடைந்தது.

நல்வாய்ப்பாக தாரணியின் வீட்டில் இருந்தவா்கள் வெளியே சென்றிருந்ததால் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது.

இதையடுத்து புதன்கிழமை காலை அந்தப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் கணேசனுடன் பழனி நகா் காவல் நிலையம், வட்டாட்சியரிடம் சென்று புகாா் செய்தனா்.

இந்த வீடு இடியும் நிலையில் உள்ளதாக நகராட்சி, வருவாய்த் துறையினருக்கு ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டும், நடவடிக்கை இல்லை என அவா்கள் வேதனை தெரிவித்தனா். இதையடுத்து வட்டாட்சியா் அலுவலக அதிகாரிகள் நகராட்சி அதிகாரிகளுக்கு உடனடியாகத் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

Story image