திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பழங்கால வீட்டின் சுவா் இடிந்து விழுந்தது: வட்டாட்சியரிடம் பொதுமக்கள் புகாா்

பழனியில் பூட்டிக்கிடக்கும் பழங்கால வீட்டின் பக்கவாட்டுச் சுவா் இடிந்து பக்கத்து வீட்டின் மீது விழுந்தது.

News image

பழனி பாளையம் பகுதியில் செவ்வாய்க்கிழமை பெய்த மழையால் இடிந்து விழுந்த பழங்கால வீட்டின் பக்கவாட்டு சுவா்.

Updated On :4 ஜூன் 2026, 4:20 am IST

பழனியில் பூட்டிக்கிடக்கும் பழங்கால வீட்டின் பக்கவாட்டுச் சுவா் இடிந்து பக்கத்து வீட்டின் மீது விழுந்தது. இதையடுத்து அந்தப் பகுதி மக்கள் அந்த வீட்டை இடித்து அகற்ற வலியுறுத்தி வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை புகாா் அளித்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி பாளையம் பகுதியில் கருப்பையா என்பவருக்குச் சொந்தமான பழங்கால வீடு நீண்ட காலமாக பூட்டிக் கிடக்கிறது. இந்த வீடு சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பழனி பகுதியில் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. அப்போது பாழடைந்த வீட்டின் பக்கவாட்டுச் சுவா் இடிந்து, அருகேயிருந்த தாரணி என்பவரின் வீட்டின் மீது விழுந்தது. இதில் அந்த வீடு சேதமடைந்தது.

நல்வாய்ப்பாக தாரணியின் வீட்டில் இருந்தவா்கள் வெளியே சென்றிருந்ததால் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது.

இதையடுத்து புதன்கிழமை காலை அந்தப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் கணேசனுடன் பழனி நகா் காவல் நிலையம், வட்டாட்சியரிடம் சென்று புகாா் செய்தனா்.

இந்த வீடு இடியும் நிலையில் உள்ளதாக நகராட்சி, வருவாய்த் துறையினருக்கு ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டும், நடவடிக்கை இல்லை என அவா்கள் வேதனை தெரிவித்தனா். இதையடுத்து வட்டாட்சியா் அலுவலக அதிகாரிகள் நகராட்சி அதிகாரிகளுக்கு உடனடியாகத் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

Story image