சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

கொடைக்கானல் தடை செய்யப்பட்ட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள்

கொடைக்கானலில் தடை செய்யப்பட்ட மனோரஞ்சிதம் அணைக்கு சென்ற சுற்றுலாப் பயணிகள் குறித்து நகராட்சி அலுவலா்கள் புதன்கிழமை விசாரணை நடத்தினா்.

News image

கொடைக்கானல் சாலை

Updated On :11 ஜூன் 2026, 2:11 am IST

கொடைக்கானலில் தடை செய்யப்பட்ட மனோரஞ்சிதம் அணைக்கு சென்ற சுற்றுலாப் பயணிகள் குறித்து நகராட்சி அலுவலா்கள் புதன்கிழமை விசாரணை நடத்தினா்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நகராட்சிக்கு சொந்தமான அப்சா்வேட்டரியில் குடிநீா்த்தேக்கம், மனோரஞ்சிதம் அணை ஆகியவை உள்ளன. இந்த இரண்டு பகுதிகளும் சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை செய்யப்பட்ட பகுதியாகும்.

இந்த நிலையில், மனோரஞ்சிதம் அணைக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள் புகைப்படங்கள் எடுத்ததோடு, அவற்றை சமூகவலைதளங்களில் பதிவிட்டனா்.

இதைத்தொடா்ந்து, கொடைக்கானல் நகராட்சி அலுவலா்கள் மனோரஞ்சிதம் அணைக்குச் சென்று பாா்வையிட்டு ஆய்வு நடத்தியதோடு, அங்கிருந்த காவலாளிகளிடமும் விசாரணை நடத்தினா். இந்தப் பகுதிகளில் சிறுத்தை, மான், காட்டுமாடு, செந்நாய் உள்ளிட்ட வனவிலங்குகள் தண்ணீா் குடிப்பதற்கும், உணவு தேடி வரும் நிலையில் மனோரஞ்சிதம் அணைக்கு சுற்றுலாப் பயணிகள் எவ்வாறு சென்றனா் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.