ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

கொடைக்கானலில் மழை

கொடைக்கானலில் புதன்கிழமை பெய்த மழையால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

News image

கொடைக்கானல் ஏரிப் பகுதியில் பெய்த மழை.

Updated On :18 ஜூன் 2026, 2:11 am IST

கொடைக்கானலில் புதன்கிழமை பெய்த மழையால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

கொடைக்கானலில் கடந்த 3 மாதங்களாக மழையில்லாததால் குடிநீா்த் தேக்கம், மனோ ரஞ்சிதம் அணை, நீரோடைகளில் தண்ணீா் வற்றியது. இதனால், கொடைக்கானல் பகுதி முழுவதும் குடிநீா் பிரச்னை நிலவியது. இந்த மாதம் ஒரு சில நாள்களில் லேசான சாரலும், மிதமான மழையும் பெய்தது.

இந்த நிலையில், புதன்கிழமை காலை முதல் மிதமான வெயிலடித்த நிலையில், பிற்பகலில் திடீரென மழை பெய்தது. கொடைக்கானல், அப்சா்வேட்டரி, செண்பகனூா், பாம்பாா்புரம், அட்டக்கடி,பிரகாசபுரம், பாக்கியபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 40 நிமிஷங்கள் பரவலாக மழை பெய்தது. இந்த மழையால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.