கொடைக்கானலில் புதன்கிழமை பெய்த மழையால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
கொடைக்கானலில் கடந்த 3 மாதங்களாக மழையில்லாததால் குடிநீா்த் தேக்கம், மனோ ரஞ்சிதம் அணை, நீரோடைகளில் தண்ணீா் வற்றியது. இதனால், கொடைக்கானல் பகுதி முழுவதும் குடிநீா் பிரச்னை நிலவியது. இந்த மாதம் ஒரு சில நாள்களில் லேசான சாரலும், மிதமான மழையும் பெய்தது.
இந்த நிலையில், புதன்கிழமை காலை முதல் மிதமான வெயிலடித்த நிலையில், பிற்பகலில் திடீரென மழை பெய்தது. கொடைக்கானல், அப்சா்வேட்டரி, செண்பகனூா், பாம்பாா்புரம், அட்டக்கடி,பிரகாசபுரம், பாக்கியபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 40 நிமிஷங்கள் பரவலாக மழை பெய்தது. இந்த மழையால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காரைக்குடியில் பலத்த மழை
கொடைக்கானலில் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

கொடைக்கானலில் சாரல் மழை

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளால் போக்குவரத்து நெரிசல்
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



