திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த கீரனூா் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் (எஸ்.எஸ்.ஐ.) காவலா் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.
பழனி அருகேயுள்ள கீரனூா் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரியும் சக்திவேல், காவலராக பணிபுரியும் பாா்த்திபன் ஆகியோா் கடந்த சில நாள்களுக்கு முன்பு கோயில் திருவிழாவுக்கு பாதுகாப்புப் பணிக்கு சென்றனா். அப்போது, திருவிழா நடத்துபவா்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதைத் தடுக்க சென்ற சக்திவேல், பாா்த்திபன் ஆகிய இருவரும் மது போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதை திருவிழா குழுவினா் விடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பினா். இதையடுத்து, திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயச்சந்திரன் இருவரையும் பணியிடை நீக்கம் செய்து வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஒசூரில் மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை: காவலா் பணியிடை நீக்கம்!

முதலீட்டு மோசடி குற்றச்சாட்டு: பெண் காவல் ஆய்வாளா் பணியிடை நீக்கம்
லஞ்சம்: காவல் ஆய்வாளா் பணியிடை நீக்கம்

லஞ்சம் பெற்ற புகாரில் காவல் ஆய்வாளா், தலைமைக் காவலா் பணியிடை நீக்கம்
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai



