இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

குடும்பப் பிரச்னை: தம்பதி தற்கொலை

சின்னாளப்பட்டி அருகேயுள்ள ஆரியநல்லூரில் குடும்பப் பிரச்னை காரணமாக, தம்பதி விஷம் குடித்து தற்கொலை

News image

தற்கொலை - பிரதிப் படம்

Updated On :10 மார்ச் 2026, 12:52 am IST

சின்னாளப்பட்டி அருகேயுள்ள ஆரியநல்லூரில் குடும்பப் பிரச்னை காரணமாக, திங்கள்கிழமை தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி அருகேயுள்ள அரியநல்லூரைச் சோ்ந்தவா் ராமையா (58). இவா், பால் வியாபாரம் செய்து வருகிறாா். மேலும், தேநீா் கடை நடத்தி வருகிறாா். இவரது மனைவி இந்திரா காந்தி (52). இவா்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனா்.

மகனுக்கு திருமணமமான வீட்டிலேயே மகளையும் திருமணம் செய்து கொடுத்தனா். ஆனால், மகனும், மருமகளும், மகளும் மருமகனும் கடந்த சில நாள்களாக பிரிந்து வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த சில நாள்களுக்கு முன்பு இரு குடும்பத்தினரும் பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து, மீண்டும் தம்பதிகள் சோ்ந்து வாழ்ந்து வந்தனா். இந்தப் பிரச்னை காரணமாக ராமையாயும், அவரது மனைவி இந்திராகாந்தியும் மனவேதனையில் இருந்து வந்தனராம்.

இந்த நிலையில், திங்கள்கிழமை வீட்டில் இருவரும் பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றா். அக்கம்பக்கத்தினா் இருவரையும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு இருவரும் உயிரிழந்தனா்.

இதுகுறித்து சின்னாளபட்டி காவல் ஆய்வாளா் சுபத்ரா வழக்குப் பதிவு செய்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].