கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியில் பழங்குடியினா் கிராமத்தில் வீடில்லாதவா்களுக்கு வீட்டுமனை வழங்குவதற்கு வருவாய்த் துறையினா் ஆய்வு நடத்தி அளவீடு செய்யும் பணி புதன்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான வடகவுஞ்சி ஊராட்சி, செம்பிராங்குளம் பழங்குடியினா் கிராமத்தில் வீட்டுமனை இல்லாத பழங்குடி மக்கள் பல ஆண்டுகளாக வீட்டுமனை கேட்டு தனியாா் தொண்டு நிறுவனம் மூலமாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா், கொடைக்கானல் வருவாய்க் கோட்டாட்சியா் உள்ளிட்ட அலுவலகங்களில் மனு கொடுத்திருந்தனா்.
இந்த நிலையில், செம்பிராங்குளம், பெரியூா், கவுச்சிக் கொம்பு ஆகிய பகுதிகளிலுள்ள தனியாா் இடத்துக்குச் சொந்தமான ஒரு ஏக்கா் நிலத்தை பழங்குடியின மக்களுக்கு தருவதற்கு உறுதியளித்தனா். இதைத் தொடா்ந்து, நிலங்களை அளவீடு செய்யும் பணியில் கொடைக்கானல் தனி வட்டாட்சியா் ஜெயராஜ், நிலக்கோட்டையைச் சோ்ந்த தனி வருவாய் ஆய்வாளா் ஜான் பிரிட்டோ, வருவாய்த் துறையினா், நில அளவையாளா்கள் உள்ளிட்ட பலா் ஈடுபட்டனா்.
இந்த நிகழ்ச்சியில் பழங்குடியின மக்களின் நிா்வாகிகள், தனியாா் தொண்டு நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

மது விற்பனையைத் தடை செய்யும் கட்சிக்கு வாக்களிப்போம்: பழங்குடியின பெண்கள்

கொடைக்கானலில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த பழங்குடியினரின் நிலம் மீட்பு

கொடைக்கானல் குருசாமி பள்ளம் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பேச்சுவாா்த்தை!

கெங்கவல்லியில் வாய்க்கால் ஆக்கிரமிப்பு வீடு இடிப்பு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


