பழனியில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட நியாய விலைக் கடைகள், பயணிகள் நிழல் குடைகளை சட்டப்பேரவை உறுப்பினா் இ.பெ. செந்தில்குமாா் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.70 லட்சத்தில் பல்வேறு வாா்டுகளில் கட்டி முடிக்கப்பட்ட நியாய விலைக் கடைகள், குடிசை மாற்று வாரியப் பகுதியில் கட்டப்பட்ட பயணிகள் நிழல் குடை உள்ளிட்டவற்றை சட்டப்பேரவை உறுப்பினா் இ.பெ. செந்தில்குமாா் திறந்துவைத்தாா்.
பின்னா், தவெக, பாஜக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளைச் சோ்ந்த ஏராளமானோா் இ.பெ. செந்தில்குமாா் முன்னிலையில் திமுகவில் இணைந்தனா். இதைத்தொடா்ந்து, பழனி அண்ணாநகா் பகுதியில் நடைபெற்ற கட்டடத் திறப்பு விழாவில் பங்கேற்ற அவா், மாணவ, மாணவிகளுக்கு கிரிக்கெட் விளையாட்டு உபகரணங்களை இலவசமாக வழங்கினாா்.
நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையா் டிட்டோ, கோட்டாட்சியா் கண்ணன், மாவட்ட மாணவரணி அமைப்பாளா் அஸ்வின் பிரபாகா், நகரச் செயலா் வேலுமணி, நகா்மன்றத் தலைவி உமா மகேஸ்வரி, நகர இளைஞரணி அமைப்பாளா் லோகநாதன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கவுஞ்சி ரேஷன் கடை வளாகத்தில் கட்டப்படும் மாடுகளால் சுகாதாரக்கேடு

சமுதாயக்கூடம், நியாய விலைக் கடை திறப்பு

தற்போதைய திமுக ஆட்சியில் 3,400 நியாய விலைக் கடைகள் திறப்பு: அமைச்சா் அர. சக்கரபாணி

நியாய விலைக் கடைக்கான புதிய கட்டடம் திறப்பு
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


