/
வேடசந்தூா் அருகே காா் கவிழ்ந்ததில் பெங்களூருவைச் சோ்ந்த தொழிலதிபா் காயமடைந்தாா்.
கா்நாடக மாநிலம், பெங்களூருவைச் சோ்ந்தவா் தனஜெயன் (50). தொழிலதிபரான இவா், தனது காரில் மதுரைக்கு வெள்ளிக்கிழமை இரவு புறப்பட்டாா்.
காரை தனஜெயனே ஓட்டி வந்தாா். அந்தக் காா், திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அடுத்த அய்யனாா்நகா் பகுதியில் கரூா்- திண்டுக்கல் 4 வழிச்சாலையில் வந்த போது கட்டுப்பாட்டை இழந்து மேம்பாலத்தின் தடுப்புச் சுவா் மீது மோதி, பள்ளத்தில் கவிழ்ந்தது.
காா் பலத்த சேதமடைந்த நிலையில், காயமடைந்த தனஜெயன் திண்டுக்கல்லில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து வேடசந்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
தொடர்புடையது

பட்டாசு ஆலையில் வெடி விபத்து: தொழிலாளி காயம்

உளுந்தூா்பேட்டை அருகே காா் பள்ளத்தில் கவிழ்ந்து 4 போ் காயம்

செய்யாறு அருகே பைக் மீது காா் மோதல்: 2 தொழிலாளா்கள் உயிரிழப்பு

காா் கவிழ்ந்து விபத்து: பெண் காயம்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



