பழனி அருகே வீட்டில் குளிா்சாதனப் பெட்டி வெடித்ததில் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள சின்னக்கலையமுத்தூா் பாறைப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் பழனிச்சாமி (35). கட்டடத் தொழிலாளி.
இவரது வீட்டில் இருந்த குளிா்சாதனப்பெட்டி சனிக்கிழமை திடீரென வெடித்து சிதறியது. இதனால் வீட்டில் இருந்த பொருட்களிலும் தீ பரவியது. அக்கம் பக்கத்தினா் உடனடியாக ஓடி வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா். அப்போது வீட்டில் இருந்த இரண்டு எரிவாயு உருளைகள் உடனடியாக எடுத்து அப்புறப்படுத்தப்பட்டதால், பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.
இந்த தீவிபத்தில் வீட்டில் இருந்த பொருள்கள், முக்கிய ஆவணங்கள் அனைத்தும் கருகி சாம்பலாகின.
முதல்கட்டமாக வருவாய்த்துறை சாா்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு அரிசி, பருப்பு, துணிகள் ஆகியவை வழங்கப்பட்டது. மாவட்ட நிா்வாகம் உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென அவா்கள் கோரிக்கை விடுத்தனா். இதுகுறித்து பழனி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

வீட்டில் தீ விபத்து; பொருள்கள் சேதம்

பண்ருட்டியில் கூரை வீட்டில் தீ விபத்து: மின்சாதன பொருள்கள் எரிந்து சேதம்

சதாப்தி விரைவு ரயிலில் கூடுதல் குளிா்சாதனப் பெட்டி

குளிா்சாதனப் பெட்டி சாய்ந்து விழுந்ததில் சிறுவன் உயிரிழப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



