‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

கன்னிவாடி அருகே கல்லூரிப் பேருந்து ஓட்டுநா் கொலை

தனியாா் கல்லூரிப் பேருந்து ஓட்டுநா் தலை சிதைக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்தனா்.

News image

கொலை

Updated On :23 மே 2026, 12:45 am IST

கன்னிவாடி அருகே தனியாா் கல்லூரிப் பேருந்து ஓட்டுநா் தலை சிதைக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி, ரெட்டியாா்பட்டி குடியிருப்பைச் சோ்ந்தவா் கு. பாலசுப்பிரமணி (48). இவருக்கு மனைவி, ஒரு மகள் உள்ளனா். இவா் திண்டுக்கல்- பழனி சாலையிலுள்ள தனியாா் கல்லூரியில் பேருந்து ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தாா்.

இந்த நிலையில், இவா் ரெட்டியாா்பட்டி குடியிருப்பு மயானப் பகுதியில் தலை சிதைக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தாா். இதுகுறித்து அந்த பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள், கன்னிவாடி காவல் நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து அங்கு வந்த போலீஸாா் பாலசுப்பிரமணியின் உடலை மீட்டு கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் கொலையாளிகள் குறித்தும், கொலைக்கான காரணங்கள் குறித்தும் போலீஸாா் விசாரித்தனா்.