தெருநாய்களை பராமரிப்பு மையத்தில்தான் அடைக்க வேண்டும்! திருத்தம் கோரிய மனுக்கள் தள்ளுபடி! மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

மதுரை அருகே 17 பவுன் நகைகள் கொள்ளை

மதுரை அருகே சனிக்கிழமை அதிகாலையில், பூட்டிய வீட்டை உடைத்து 17 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

Updated On :13 மே 2013, 12:07 am IST

மதுரை அருகே சனிக்கிழமை அதிகாலையில், பூட்டிய வீட்டை உடைத்து 17 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

  மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டியைச் சேர்ந்தவர் ரமேஷ் (42). இவர் வெள்ளிக்கிழமை மாலை தனது வீட்டைப் பூட்டிவிட்டு, துக்கம் விசாரிப்பதற்காக உறவினர் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றிருந்துள்ளார். இவர்கள், சனிக்கிழமை அதிகாலை வீடு திரும்பியுள்ளனர். அப்போது, வீட்டின் பின்பக்கக் கதவு உடைக்கப்பட்டு, பீரோவிலிருந்த 17 பவுன் நகைகள், ரூ. 80 ஆயிரம் ரொக்கம் மற்றும் ரூ. 25 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளிப் பொருள்கள் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

  இது தொடர்பாக, ரமேஷ் அளித்த புகாரின்பேரில், டி. கல்லுப்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

  மேலும், சம்பவ இடத்துக்கு போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. தடயவியல் நிபுணர்களும் வந்திருந்து கைரேகைகளை பதிவு செய்தனர்.

  மதுரை ஊமச்சிகுளம் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவர், கடந்த 9 ஆம் தேதி தனது மகளை மதுரை எல்லீஸ்நகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றிருந்தார். அப்போது, இவரது வீட்டின்  பூட்டை உடைத்து 3 பவுன் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

  இது குறித்து, ஊமச்சிகுளம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.