தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

அரசு மருத்துவமனை ஊழியர் வீட்டில் 8 பவுன் நகை, ரூ.15 ஆயிரம் திருட்டு

மதுரையில் அரசு மருத்துவமனை ஊழியர் வீட்டில் பூட்டை உடைத்து 8 பவுன் நகை, ரூ.15 ஆயிரத்தை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச்சென்றதாக புதன்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :16 நவம்பர் 2017, 1:41 am

DIN

மதுரையில் அரசு மருத்துவமனை ஊழியர் வீட்டில் பூட்டை உடைத்து 8 பவுன் நகை, ரூ.15 ஆயிரத்தை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச்சென்றதாக புதன்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை திருப்பாலை வஉசி நகரைச் சேர்ந்தவர் நாகபாண்டி(53). மதுரை அரசு மருத்துவமனையில் செவிலியர் உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவரது தாய் இறந்ததை அடுத்து மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள செட்டியப்பட்டிக்கு குடும்பத்துடன் ஞாயிற்றுக்கிழமை சென்று விட்டார்.
அங்கு இறுதிச்சடங்குக்காக நாகபாண்டி அங்கேயே தங்கிவிட்டார். இந்நிலையில் நாகபாண்டியின் மூத்தமகள் கோதை நாயகி செவ்வாய்க்கிழமை தந்தை வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் பின்கதவு உடைக்கப்பட்டு பீரோவில் உள்ள பொருள்கள் சிதறிக்கிடந்துள்ளன.
இதையடுத்து கோதைநாயகி அளித்தத் தகவலின்பேரில் நாகபாண்டி வீட்டுக்கு வந்து பொருள்களை சரிபார்த்துள்ளார். அப்போது பீரோவில் இருந்த 8 பவுன் நகை, ரூ.15 ஆயிரம் மற்றும் வெள்ளிப்பொருள்களை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச்சென்றது தெரிந்தது.
இதுகுறித்து தல்லாகுளம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.