பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

மதுரையில் தொடர் திருட்டு: இளைஞர் கைது

மதுரை தெற்குவாசல் பகுதியில் பூட்டிய கடை மற்றும் வீடுகளில் பூட்டுகள் உடைக்கப்பட்டு தொடர் திருட்டு நடந்து வந்தது. இதுதொடர்பாக தெற்குவாசல்

News image
Updated On :16 நவம்பர் 2017, 1:40 am

DIN

மதுரை தெற்குவாசல் பகுதியில் பூட்டிய கடை மற்றும் வீடுகளில் பூட்டுகள் உடைக்கப்பட்டு தொடர் திருட்டு நடந்து வந்தது. இதுதொடர்பாக தெற்குவாசல் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் போலீஸார் நடத்திய விசாரணையில் மதுரை ஜெய்ஹிந்துபுரம் சோலையழகுபுரத்தைச் சேர்ந்த அஸார் (21) என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரிந்தது. இதையடுத்து போலீஸார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் தெற்குவாசல் பகுதியில் 6 கடைகளில் பூட்டை உடைத்து ரூ. 2 லட்சம் பணத்தைத் திருடியது தெரிந்தது. மேலும் பூட்டிய வீடுகளிலும் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. இதையடுத்து போலீஸார் அஸாரை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.