அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

தனக்கன்குளம் பகுதியில் சுகாதாரத்தை பராமரிக்க கோரிக்கை

திருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன்குளம் பகுதியில் சுகாதாரம் பராமரிக்கப்படாததால் அப்பகுதி பொதுமக்கள் டெங்கு காய்ச்சல் அச்சத்தில் உள்ளனர்.

News image
Updated On :12 அக்டோபர் 2017, 1:56 am

DIN

திருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன்குளம் பகுதியில் சுகாதாரம் பராமரிக்கப்படாததால் அப்பகுதி பொதுமக்கள் டெங்கு காய்ச்சல் அச்சத்தில் உள்ளனர்.
 திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட தனக்கன்குளம் பி.ஆர்.சி. காலனியைச் சேர்ந்த பாண்டி என்பவரது மகன் ஜெயபிரகாஷ் (16)  தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவர் கடந்த இரண்டு நாள்களாக வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் சிலரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் சுகாதாரம் பராமரிக்கப்பட வில்லை என அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஆனாலும் எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை எனஅவர்கள்  கூறுகின்றனர்.
இதுகுறித்து முருகன் என்பவர் கூறியதாவது: தனக்கன்குளம் பி.ஆர்.சி. காலனி மற்றும் திருவள்ளுவர் நகர் பகுதியில் சாக்கடைகள் பல நாள்களாக தேங்கியுள்ளது. மேலும் இப்பகுதிகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கிக் கிடக்கிறது. இதுகுறித்து திருப்பரங்குன்றம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பலமுறை கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது மாணவர் உள்ளிட்ட பலருக்கு காய்ச்சல்  வந்தவுடன் துப்புரவு பணி செய்கின்றனர் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.