பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

பூட்டிய வீட்டில் 13 பவுன் நகைகள் திருட்டு

மதுரையில் பூட்டிய வீட்டில் 13 பவுன் நகைகளை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச்சென்றுள்ளனர்.

Updated On :5 ஏப்ரல் 2018, 8:55 am IST

மதுரையில் பூட்டிய வீட்டில் 13 பவுன் நகைகளை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச்சென்றுள்ளனர்.
 மதுரை விராட்டிபத்து மலையாள நகரைச் சேர்ந்தவர் சோமசுந்தரம் (76). இவர் கரூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு மார்ச் 13-ஆம் தேதி சென்றுவிட்டார். அங்கிருந்து செவ்வாய்க்கிழமை இரவு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டிருந்தது. அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 13 பவுன் நகையை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச்சென்றது தெரிந்தது. இச்சம்பவம் தொடர்பாக சோமசுந்தரம் அளித்த புகாரின்பேரில் எஸ்.எஸ்.காலனி போலீஸார் புதன்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.