திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

தண்ணீர் லாரியை சிறைபிடித்து  பொதுமக்கள் போராட்டம்

மதுரை பெத்தானியாபுரம் மேட்டுத்தெரு உள்ளிட்ட சில பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளது.

Updated On :18 ஏப்ரல் 2018, 8:04 am IST

மதுரை பெத்தானியாபுரம் மேட்டுத்தெரு உள்ளிட்ட சில பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளது. இந்நிலையில் மாநகராட்சி தண்ணீர் லாரியும் முறையாக வரவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர், பெத்தானியாபுரம் அண்ணா பிரதான சாலையில் செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
 அப்போது அந்த வழியாக வந்த மாநகராட்சி தண்ணீர் லாரியை சிறைபிடித்தனர். இதுகுறித்து தகவலறிந்த மாநகராட்சி அதிகாரிகள் தண்ணீர் லாரியை மீட்கச் சென்றனர். 
அவர்களையும் பொதுமக்கள் சிறைபிடித்தனர். இதையடுத்து குடிநீர் விநியோகம் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். அதன்பேரில், தண்ணீர் லாரியையும், அதிகாரிகளையும் பொதுமக்கள் விடுவித்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.