குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

மதுரையில் ஏப்.23-இல் பெரியார் சிலை முதல் தமிழன்னை சிலை வரை மனிதச் சங்கிலி: திமுக, கூட்டணி கட்சிகள் முடிவு

காவிரி மேலா ண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மதுரையில் பெரியார் சிலை முதல் தமிழன்னை சிலை வரை ஏப்ரல் 23-இல் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்த திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் முடிவு செய்துள்ளன.

Updated On :18 ஏப்ரல் 2018, 9:36 am IST

காவிரி மேலா ண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மதுரையில் பெரியார் சிலை முதல் தமிழன்னை சிலை வரை ஏப்ரல் 23-இல் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்த திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் முடிவு செய்துள்ளன.
காக்கா தோப்பு தெருவில் உள்ள திமுக மாநகர் மாவட்ட அலுவலகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திமுக மாநகர் மாவட்டச் செயலர்கள் வ.வேலுச்சாமி, கோ.தளபதி  ஆகியோர் தலைமை வகித்தனர். 
காங்கிரஸ் மாநகர் மாவட்டத் தலைவர் வீ.கார்த்திகேயன், பொருளாளர் ராதாகிருஷ்ணன்,  மதிமுக மாநகர் மாவட்டச் செயலர் புதூர் மு.பூமிநாதன்,  தொழிற்சங்க மாநில இணைப் பொதுச் செயலர் மகபூப் ஜான்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்.அண்ணாதுரை, ஜோதிராம், இந்திய கம்யூனிஸ்ட் மாநகர் மாவட்டச் செயலர் சரவணன் மற்றும் அப்துல் காதர் ஆலிம் (முஸ்லிம் லீக்), ஷேக் இப்ராகிம் (தமுமுக), காதர் மைதீன் (மனிதநேய மக்கள் கட்சி), சாமிக்கண்ணு (ஆதித் தமிழர் பேரவை) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
இதில், மதுரையில் வரும் 23-ஆம் தேதி மாலை 4 முதல் 5 மணி வரை தல்லாகுளம் பெரியார் சிலை அருகிலிருந்து தமிழன்னை சிலை வரை  மனிதச் சங்கிலி போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.