மேலூரிலிருந்து சிவகங்கைக்கு ஞாயிற்றுக்கிழமை சென்ற தனியார் பேருந்து மரத்தில் மோதியதில் பயணிகள் 8 பேர் காயமடைந்தனர்.
மேலூரிலிருந்து தனியார் பேருந்து சிவகங்கைக்கு ஞாயிற்றுக்கிழமை காலை சென்று கொண்டிருந்தது. கோட்டநத்தம்பட்டி அருகே எல்லைப் பந்தயத்துக்காக மாட்டு வண்டிகளை சிலர் ஓட்டிவந்துள்ளனர். அவ்வழியாக தனியார் பேருந்து வந்தபோது, மாடுகள் மிரண்டு சாலையின் குறுக்கே சென்றதாம். மாட்டுவண்டி மீது மோதுவதை தவிர்க்க, ஓட்டுநர் பேருந்தை திருப்ப முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியது. இந்த விபத்தில் மங்கையர்கரசி (55) பொன்னழகு (45) உள்ளிட்ட 8 பேர் காயமடைந்தனர். விபத்து குறித்து கீழவளவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நெசவாளர்களுக்கு ரூ. 10 லட்சம் காப்பீடு: விஜய் வாக்குறுதி

ஈரான் - அமெரிக்கா பேச்சுவார்த்தையின் இரண்டாம் சுற்று அடுத்த வாரம் நடைபெறுமா?

இந்தியன் சூப்பர் லீக்கில் இனவெறி தாக்குதல்..! இந்திய கால்பந்து சம்மேளனம் கண்டனம்!

அடுத்து என்ன? பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகள் தனிக் கவனம்!
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு

