எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மதிமுக-நாம் தமிழர் கட்சியினர் மோதல் வழக்கு: சீமானுக்கு முன் ஜாமீன்

திருச்சி விமான நிலையத்தில் மதிமுக - நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் மோதிக்கொண்ட வழக்கில், சீமானுக்கு முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

News image
Updated On :5 ஜூன் 2018, 12:05 am

DIN

திருச்சி விமான நிலையத்தில் மதிமுக - நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் மோதிக்கொண்ட வழக்கில், சீமானுக்கு முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
இந்த வழக்குத் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த மனு:
புதுக்கோட்டை மாவட்டம், கதிராமங்கலத்தில் நடைபெறும் போராட்டம் தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்றதையடுத்து அங்குள்ள மக்களைச் சந்திப்பதற்காக கடந்த மே 19 ஆம் தேதி, சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தேன்.
அதே விமானத்தில் மதிமுக பொதுச்செயலர் வைகோவும் வந்துள்ளார். இந்நிலையில் திருச்சி விமான நிலையத்தின் வெளியே என்னை வரவேற்க காத்திருந்த என் கட்சி தொண்டர்களுக்கும், வைகோவின் தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த காவலர்களின் வாகனங்கள் சேதமடைந்தன. இச்சம்பவம் தொடர்பாக திருச்சி விமான நிலைய காவல் நிலையத்தில் என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது அரசியல் காழ்ப்புணர்ச்சியில் பதிவு செய்யப்பட்ட வழக்கு. எனவே, இந்த வழக்கில் இருந்து எனக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன், திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, சீமானுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.