3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

மதுரையில் ஒரு நாள் சுற்றுலா சென்ற பள்ளிக் குழந்தைகள்

மதுரையில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளின் குழந்தைகள் 150 பேர் ஒரு நாள் சுற்றுலாவாக அழகர்கோவில் உள்ளிட்ட இடங்களுக்கு புதன்கிழமை அழைத்துச்செல்லப்பட்டனர். 

News image
Updated On :1 மார்ச் 2018, 4:13 am

தினமணி

மதுரையில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளின் குழந்தைகள் 150 பேர் ஒரு நாள் சுற்றுலாவாக அழகர்கோவில் உள்ளிட்ட இடங்களுக்கு புதன்கிழமை அழைத்துச்செல்லப்பட்டனர்.
 மதுரை மாவட்ட சுற்றுலா துறை சார்பில் அரசு, உதவி பெறும் பள்ளிகளின் மாணவ, மாணவியர் 150 பேர் புதன்கிழமை ஒரு நாள் சுற்றுலா விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக பல்வேறு இடங்களுக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள தமிழ்நாடு விடுதியில் இருந்து சுற்றுலாவை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
 அழகர்கோவிலுக்கு அழைத்துச்செல்லப்பட்ட மாணவ, மாணவியர் அங்கு கள்ளழகர் திருக்கோயில், சோலைமலை முருகன் கோயில் மற்றும் சிலம்பாற்றருவிக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.
 அங்கு மூலிகை வனத்தையும் அவர்கள் பார்வையிட்டனர். பின்னர் மதுரை உலகத் தமிழ்ச்சங்க வளாகம், காந்தி நினைவு அருங்காட்சியகம் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டனர்.
 மதிய உணவுக்குப் பின்னர் மாரியம்மன் தெப்பக்குளம், திருப்பரங்குன்றம் சுற்றுச்சூழல் பூங்கா மற்றும் திருமலைநாயக்கர் மகாலுக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். சுற்றுலா சம்பந்தமான போட்டிகளும் நடத்தப்பட்டு பரிசளிக்கப்பட்டது.
 சுற்றுலா நிகழ்ச்சிகளில் மாவட்ட சுற்றுலா அலுவலர் ஸ்ரீ பாலமுருகன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் என்.மாரிமுத்து, தமிழ்நாடு விடுதி மேலாளர் டேவிட்
 உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.