மதுரை மாவட்டம் காடுபட்டி அருகே செவ்வாய்க்கிழமை இரவு மணல் கடத்திய வேனை தடுக்க முயன்ற சார்பு- ஆய்வாளர் மற்றும் காவலர் மீது வேனை ஏற்றிக் கொல்ல முயற்சி நடந்துள்ளது.
காடுபட்டி அருகே வைகையாற்றில் வாகனம் மூலம் மணல் கடத்தப்படுவதாக காடுபட்டி போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை இரவு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சார்பு- ஆய்வாளர் தனபாலன், காவலர் பெரிய மாயன் ஆகியோர் காடுபட்டி வைகையாற்றுக்குச் சென்றனர். ஆற்றங்கரை சாலையில் சென்றபோது, எதிரே வந்த வேனை நிறுத்த முயன்றனர். அப்போது வேனை நிறுத்தாத ஓட்டுநர், சார்பு ஆய்வாளர், காவலர் மீது வேனை மோத முயன்றார். இருவரும் அங்கிருந்து விலகிச்சென்றதால் உயிர் தப்பினர். அங்கிருந்த தப்பிச்சென்ற வேனை இருவரும் இருசக்கர வாகனத்தில் விரட்டிச்சென்றனர். போலீஸார் விரட்டி வருவதை அறிந்த ஓட்டுநர் சோழவந்தான் சாலையில் வேனை விட்டுவிட்டு தப்பிச் சென்று விட்டார். வேனை போலீஸார் சோதனையிட்டபோது, அதில் மணல் இருப்பது தெரியவந்தது. வேனை பறிமுதல் செய்து தப்பிச்சென்ற ஓட்டுநரை போலீஸார் தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நரசிம்மர் ஜெயந்தி: பூவரசன்குப்பம்லட்சுமி நரசிம்மர் கோயிலில் சிறப்பு வழிபாடு!
கர - டிக்கெட் முன்பதிவு மந்தம்!
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30

துருவ நட்சத்திரம் வெளியீட்டுத் தேதி இதுவா?
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

