மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

மணல் கடத்தலை தடுத்த சார்பு-ஆய்வாளர், காவலர் மீது வேனை ஏற்ற முயற்சி

மதுரை மாவட்டம் காடுபட்டி அருகே செவ்வாய்க்கிழமை இரவு மணல் கடத்திய வேனை  தடுக்க முயன்ற சார்பு- ஆய்வாளர் மற்றும் காவலர் மீது வேனை ஏற்றிக் கொல்ல முயற்சி நடந்துள்ளது.   

Updated On :29 மார்ச் 2018, 2:48 am

மதுரை மாவட்டம் காடுபட்டி அருகே செவ்வாய்க்கிழமை இரவு மணல் கடத்திய வேனை  தடுக்க முயன்ற சார்பு- ஆய்வாளர் மற்றும் காவலர் மீது வேனை ஏற்றிக் கொல்ல முயற்சி நடந்துள்ளது.   
காடுபட்டி அருகே வைகையாற்றில் வாகனம் மூலம் மணல் கடத்தப்படுவதாக காடுபட்டி போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை இரவு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சார்பு- ஆய்வாளர் தனபாலன், காவலர் பெரிய மாயன் ஆகியோர் காடுபட்டி வைகையாற்றுக்குச் சென்றனர். ஆற்றங்கரை சாலையில் சென்றபோது, எதிரே வந்த வேனை நிறுத்த முயன்றனர். அப்போது வேனை நிறுத்தாத ஓட்டுநர், சார்பு ஆய்வாளர், காவலர் மீது வேனை மோத முயன்றார். இருவரும் அங்கிருந்து விலகிச்சென்றதால் உயிர் தப்பினர். அங்கிருந்த தப்பிச்சென்ற வேனை இருவரும் இருசக்கர வாகனத்தில் விரட்டிச்சென்றனர். போலீஸார் விரட்டி வருவதை அறிந்த ஓட்டுநர் சோழவந்தான் சாலையில் வேனை விட்டுவிட்டு தப்பிச் சென்று விட்டார். வேனை போலீஸார் சோதனையிட்டபோது, அதில் மணல் இருப்பது தெரியவந்தது. வேனை பறிமுதல் செய்து தப்பிச்சென்ற ஓட்டுநரை போலீஸார் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.