மதுரை மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயில் உண்டியலில் பக்தர்கள் மார்ச் மாதம் ரூ.58.83 லட்சம் காணிக்கை செலுத்தியுள்ளனர்.
மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயில் மற்றும் அதன் உப கோயில்களான தெப்பக்குளம் முக்தீஸ்வரர், மாரியம்மன், செல்லூர் திருவாப்புடையார், சிம்மக்கல் ஆதி சொக்கநாதர் உள்ளிட்ட கோயில்களின் உண்டியல் எண்ணிக்கைகள் மாதந்தோறும் நடத்தப்படும். மார்ச் மாதத்துக்கான உண்டியல்கள் எண்ணிக்கை மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயில் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது. திருக்கோயில் இணை ஆணையர் என்.நடராஜன் முன்னிலையில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில், திருக்கோயில் பணியாளர்கள், வங்கி அலுவலர்கள், பக்தர்கள் சபையினர் உள்ளிட்டோர் ஈடுபட்டனர். உண்டியல்களில் ரூ.58.83 லட்சம் ரொக்கம், 427 கிராம் தங்கம், 1042 கிராம் வெள்ளிப் பொருள்கள் இருந்தன. பித்தளை பொருள்கள் 1890 கிராம், 371 வெளிநாட்டு பணத் தாள்கள் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள்! - சு. முத்துசாமி பெருமிதம்

மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவாா்! - ஓபிஎஸ்!

ஒசூரில் மனநலம் பாதித்த அஸ்ஸாம் பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

மூத்த குடிமக்கள் வீட்டிற்கே சென்று வாக்கு பெறும் பணி ஆட்சியா் ஆய்வு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

