பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

மதுரை அருகே சார்பு -ஆய்வாளருக்கு கத்திக்குத்து

மதுரை மாவட்டம் சேடப்பட்டி அருகே திங்கள்கிழமை நள்ளிரவில் காவல் சார்பு-ஆய்வாளரை கத்தியால் குத்திவிட்டு தப்பிச்சென்ற இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

Updated On :13 பிப்ரவரி 2019, 7:59 am IST

மதுரை மாவட்டம் சேடப்பட்டி அருகே திங்கள்கிழமை நள்ளிரவில் காவல் சார்பு-ஆய்வாளரை கத்தியால் குத்திவிட்டு தப்பிச்சென்ற இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
சேடப்பட்டி காவல்நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணிபுரிபவர் மாயன்(52). இவர் திங்கள்கிழமை இரவு காவல்நிலையத்தில் பணியில் இருந்தார். அப்போது காளப்பன்பட்டி கிராமத்தில் பிரச்னை இருப்பதாக தகவல் வந்ததை அடுத்து மற்றொரு காவலருடன் இருசக்கர வாகனத்தில் காளப்பன்பட்டிக்கு சென்றார். 
அங்கு பிரச்னை தொடர்பாக விசாரித்து விட்டு சின்னக்கட்டளை வழியாக காவல்நிலையம் திரும்பிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் சின்னக்கட்டளை அருகே வந்தபோது சாலையில்  சந்தேகத்துக்கிடமாக இருவர் நின்றிருந்தனர். இதனால் சந்தேகமடைந்த மாயன் வாகனத்தை நிறுத்தி விட்டு இருவரையும் விசாரித்து விட்டு அவர்களை சோதனையிட முயன்றார். 
அப்போது அதில் ஒருவர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாயனின் தோளில் குத்திவிட்டு அங்கிருந்து இருவரும் தப்பிச்சென்றனர்.
இதில் பலத்த காயமடைந்த மாயன் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சம்பவம் தொடர்பாக மாயன் அளித்தப் புகாரின்பேரில் சேடப்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து தப்பிச்சென்ற இருவரையும் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.