உசிலம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் 16 கிலோ கஞ்சா மற்றும் ரூ.1.32 லட்சம் ரொக்கம் ஆகியவைகளை பறிமுதல் செய்து 4 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
உசிலம்பட்டி அருகேயுள்ள நடுப்பட்டி பகுதியில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ் வழியாக வந்த 3 இரு சக்கர வாகனங்களில் வந்தவர்களை வழிமறித்து சோதனை செய்ததில் அவர்களிடம் 16 கிலோ 200 கிராம் கஞ்சா, மற்றும் ரூ.1,32,500 ரொக்கம், ஆகியவை இருந்தது தெரியவந்தது.
அவர்களிடம் செய்த விசாரணையில், நல்லமாபட்டியைச் சேர்ந்த ஆதிசிவனாண்டி மகன் சேகர், கீரிபட்டி காமாயி என்ற காந்தமாள், இதே ஊரைச் சேர்ந்த காசிமாயன் மகன் முருகன், கொக்குளத்தைச் சேர்ந்த முத்துக்காளை மகன் ராமராஜ், ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து கஞ்சா, பணம், 3 இரு சக்கர வாகனங்களை போலீஸார் பறிமுதல் மேலும் விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணி

ரயில்வேயில் அசிஸ்டன்ட் லோகோ பைலட் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
