இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

மதுரை அருகே சார்பு -ஆய்வாளருக்கு கத்திக்குத்து

மதுரை மாவட்டம் சேடப்பட்டி அருகே திங்கள்கிழமை நள்ளிரவில் காவல் சார்பு-ஆய்வாளரை கத்தியால் குத்திவிட்டு தப்பிச்சென்ற இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

Updated On :13 பிப்ரவரி 2019, 7:59 am IST

மதுரை மாவட்டம் சேடப்பட்டி அருகே திங்கள்கிழமை நள்ளிரவில் காவல் சார்பு-ஆய்வாளரை கத்தியால் குத்திவிட்டு தப்பிச்சென்ற இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
சேடப்பட்டி காவல்நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணிபுரிபவர் மாயன்(52). இவர் திங்கள்கிழமை இரவு காவல்நிலையத்தில் பணியில் இருந்தார். அப்போது காளப்பன்பட்டி கிராமத்தில் பிரச்னை இருப்பதாக தகவல் வந்ததை அடுத்து மற்றொரு காவலருடன் இருசக்கர வாகனத்தில் காளப்பன்பட்டிக்கு சென்றார். 
அங்கு பிரச்னை தொடர்பாக விசாரித்து விட்டு சின்னக்கட்டளை வழியாக காவல்நிலையம் திரும்பிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் சின்னக்கட்டளை அருகே வந்தபோது சாலையில்  சந்தேகத்துக்கிடமாக இருவர் நின்றிருந்தனர். இதனால் சந்தேகமடைந்த மாயன் வாகனத்தை நிறுத்தி விட்டு இருவரையும் விசாரித்து விட்டு அவர்களை சோதனையிட முயன்றார். 
அப்போது அதில் ஒருவர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாயனின் தோளில் குத்திவிட்டு அங்கிருந்து இருவரும் தப்பிச்சென்றனர்.
இதில் பலத்த காயமடைந்த மாயன் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சம்பவம் தொடர்பாக மாயன் அளித்தப் புகாரின்பேரில் சேடப்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து தப்பிச்சென்ற இருவரையும் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.